என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையத்தில் வீட்டில் இருந்த 2½ பவுன் நகை அபேஸ்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அம்பலபுளி பஜாரில் வசித்து வருபவர் முத்துக்கனி, வியாபாரி.
இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் முத்துக்கனியின் தாயார் சுப்புலட்சுமியிடம் கழிப்பறையை சுத்தம் செய்ய வந்திருப்பதாக கூறினார்.
மகன் தான் அவரை அனுப்பி இருப்பார் என நினைத்த சுப்புலட்சுமி வீட்டுக்குள் உள்ள கழிவறைக்கு செல்ல அனுமதித்தார்.
பணியை முடித்து விட்டு அந்த வாலிபர் சென்ற பிறகு வீட்டில் இருந்த 2½ தங்சச்சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு சுப்புலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மகனுக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் கழிவறையை சுத்தம் செய்ய வந்திருப்பதாக வீட்டுக்குள் வந்த நபர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்