search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறைந்த எஸ்.ஐ பூமிநாதனின் மனைவியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
    X
    மறைந்த எஸ்.ஐ பூமிநாதனின் மனைவியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

    மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கினார் மு.க.ஸ்டாலின்

    மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் மனைவியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுகள் திருடும் கும்பலை பிடிக்க முயன்றபோது கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தாருக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி கவிதா மற்றும் மகன் குகன்பிரசாத்திடம் வழங்கினார்.

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சின்போது, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதையும் படியுங்கள்.. வெள்ள பாதிப்பை தடுக்க மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    Next Story
    ×