search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 19-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 43 ஆயிரத்து 350 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 79 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
    Next Story
    ×