search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை

    விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகை மாவட்டம் நாகூர் பெருமாள் மேலவீதியை சேர்ந்தவர் சந்தனசாமி. இவருடைய மகன் இன்பராஜ் (வயது 22). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர்களான நாகூரை சேர்ந்த தனுஷ், ஏபினேஷ் ஆகியோர் கடந்த 7-ந் தேதி வேளாங்கண்ணி அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்கள். இதனால் துக்கத்தில் இருந்து வந்த இன்பராஜ் நேற்று முன்தினம் இரவு குளிர்பானத்தில் தலைக்கு பூசும் சாயத்தை(டையை) கலந்து குடித்துள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×