search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருக்கோவிலூர் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

    திருக்கோவிலூர் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே எஸ்.கொல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 18). பெங்களூருவில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் ரொட்டியில் விஷ மருந்தை தடவி சாப்பிட்டுள்ளார். இதி்ல் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×