என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசியில் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் மோசடி
Byமாலை மலர்22 Nov 2021 10:41 AM GMT (Updated: 22 Nov 2021 10:41 AM GMT)
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாகலாபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரிடம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் என 2 பேர் பேசி உள்ளனர்.
தங்களது பெயர் அருண், ரமேஷ் என கூறிய அவர்கள் விருதுநகர், ராஜபாளையம், கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் தங்களது நிதி நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரைகடன் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பணமாக ரூ.2 ஆயிரத்து 400 செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய மாரியம்மாள் பலரிடம் பணம் பெற்று ரூ.24 ஆயிரத்து 900 கட்டி உள்ளார்.
அதன் பிறகு பணத்தை பெற்ற 2 பேரும் மாயமாகி விட்டனர். அவர்களது செல்போன்களும் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாரியம்மாள் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாகலாபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரிடம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் என 2 பேர் பேசி உள்ளனர்.
தங்களது பெயர் அருண், ரமேஷ் என கூறிய அவர்கள் விருதுநகர், ராஜபாளையம், கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் தங்களது நிதி நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரைகடன் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பணமாக ரூ.2 ஆயிரத்து 400 செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய மாரியம்மாள் பலரிடம் பணம் பெற்று ரூ.24 ஆயிரத்து 900 கட்டி உள்ளார்.
அதன் பிறகு பணத்தை பெற்ற 2 பேரும் மாயமாகி விட்டனர். அவர்களது செல்போன்களும் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாரியம்மாள் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X