search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா கிட்டம்பட்டி பக்கமுள்ள மட்டமந்தையை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி பிரியா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த பிரியா உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியா இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×