search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கும்பகோணம் அருகே வீட்டு பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

    கும்பகோணம் அருகே வீட்டு பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சோழபுரம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவரது மனைவி ஹாஜா நாச்சியார். இவர்களின் இரண்டு மகள்களுக்கும் திருமணமானதால் இருவர் மட்டும் சோழபுரத்தில் வசிக்கின்றனர். சம்பவத்தன்று சிக்கல் நாயக்கன் பேட்டை மற்றும் பந்தநல்லூரில் உறவினர் குடிபோகும் நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்ட நிலையில் நிலை கதவு திறந்து இருப்பதை பார்த்த அதே தெருவைச் சேர்ந்த அவரது உறவினர் நிஜாம் அகமது இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சாதிக் அலி அங்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு மற்றும் உள்ளே உள்ள பீரோக்களை மர்ம நபர்கள் உடைத்து பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்த தகவலின்பேரில் சோழபுரம் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×