search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மீன்சுருட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    மீன்சுருட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சலுப்பை காலனி தெருவை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி துர்காதேவி(32). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 2 நாட்களாக அளவுக்கு அதிகமாக திருமுருகன் மது குடித்து வந்ததாக தெரிகிறது. இது பற்றி துர்காதேவி கேட்டபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வெண்ணங்குழி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்ற திருமுருகன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக துர்காதேவிக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அருகில் இருந்தவர்கள் திருமுருகனை மீட்டு மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு திருமுருகனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து துர்காதேவி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×