search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் கனமழை
    X
    தமிழகத்தில் கனமழை

    தமிழகத்தில் கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க உள்ள நிலையில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
    சென்னை:

    தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில் தீவிரமடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கனமழை காரணமாக சென்னை, தருமபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    சென்னை மழை

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மேலும் ரெட் அலர்ட்டை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார். 

    Next Story
    ×