என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 மாணவி கடத்தி திருமணம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்18 Nov 2021 10:21 AM GMT (Updated: 18 Nov 2021 10:21 AM GMT)
குடியாத்தம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்:
குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ்-2 மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த மாணவி பயன்படுத்திய செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து நடத்திய விசாரணையில் ேக.வி.குப்பத்தை அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவருடைய மகன் சுகேஷ்குமார் (வயது 20) என்பவர் அதிகமுறை பேசியது தெரியவந்தது.
நாகல் கிராமத்தில் சுகேஷ்குமார் இருப்பதை அறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த மாணவியுடன் சுகேஷ்குமார் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மிஸ்டுகால் மூலம் கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்ததும், அந்த மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி சில தினங்களுக்கு முன் கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியை மீட்டு சுகேஷ்குமாரை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ்-2 மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த மாணவி பயன்படுத்திய செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து நடத்திய விசாரணையில் ேக.வி.குப்பத்தை அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவருடைய மகன் சுகேஷ்குமார் (வயது 20) என்பவர் அதிகமுறை பேசியது தெரியவந்தது.
நாகல் கிராமத்தில் சுகேஷ்குமார் இருப்பதை அறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த மாணவியுடன் சுகேஷ்குமார் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மிஸ்டுகால் மூலம் கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்ததும், அந்த மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி சில தினங்களுக்கு முன் கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியை மீட்டு சுகேஷ்குமாரை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X