என் மலர்

    செய்திகள்

    புதுச்சேரி
    X
    புதுச்சேரி

    புதுச்சேரி - தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலையில், கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது புதுச்சேரி அரசு.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் தற்போது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், புதுச்சேரியில் கோவில் திருவிழாக்கள், மத விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாள்தோறும் இரவு நேர ஊரடங்கு அமல் ( இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை)
     
    சமூக, பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் கூடுவதற்கு தொடர்ந்து தடை  

    இரவு ஊரடங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் கடற்கரை, பூங்காவை திறந்திருக்கலாம்.

    திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம்.

    இறுதி ஊர்வலங்களில்  20  பேர் வரை கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×