search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    நெல்லையில் வெவ்வேறு இடங்களில் மயங்கி விழுந்து 3 பேர் மரணம்

    நெல்லையில் வெவ்வேறு இடங்களில் மயங்கி விழுந்து 3 பேர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது59). இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசுப்பு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×