என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

    கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கண்டியன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லாயி (வயது 80). இவர் அவரது உறவினரான பழனிசாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கறம்பக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அம்புக்கோவில் சாலையில் சென்ற போது நாய் குறுக்கே செல்லவே, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி செல்லாயி, பழனிசாமி ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் செல்லாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மகேந்திரன் கறம்பக்குடி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×