என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்குவை தடுக்கும் வழிமுறைகள்- சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்
Byமாலை மலர்13 Nov 2021 2:59 AM GMT (Updated: 13 Nov 2021 2:59 AM GMT)
2 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரியை அணுகவேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசத்தில் டெங்குவை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கொசு மருந்து அடித்தல் மற்றும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைளில் முன்கள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு மற்றும் சிக்குன்குனியா வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.
தேங்காய் மட்டைகளை நிமிர்த்து வைக்காமல் நீர் தேங்காமல் கவிழ்த்து வைப்போம். தேவையுள்ள தண்ணீர் பானையை மூடி வைப்போம். தேவையற்ற பானைகளை மூடிவைப்போம். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம். தேவையற்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்துவோம்.
தேவையற்ற டயர்களை தவிர்ப்போம். தேவையெனில் ஓட்டைபோட்டு மழைநீர் தேங்காமல் தடுப்போம். தண்ணீர் தொட்டியை கொசு புகாமல் மூடி வைப்போம். 2 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரியை அணுகவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசத்தில் டெங்குவை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கொசு மருந்து அடித்தல் மற்றும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைளில் முன்கள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு மற்றும் சிக்குன்குனியா வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.
தேங்காய் மட்டைகளை நிமிர்த்து வைக்காமல் நீர் தேங்காமல் கவிழ்த்து வைப்போம். தேவையுள்ள தண்ணீர் பானையை மூடி வைப்போம். தேவையற்ற பானைகளை மூடிவைப்போம். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம். தேவையற்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்துவோம்.
தேவையற்ற டயர்களை தவிர்ப்போம். தேவையெனில் ஓட்டைபோட்டு மழைநீர் தேங்காமல் தடுப்போம். தண்ணீர் தொட்டியை கொசு புகாமல் மூடி வைப்போம். 2 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரியை அணுகவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X