என் மலர்
செய்திகள்

விபத்து பலி
பாலக்கோட்டில் கார் மோதி வாலிபர் பலி
பாலக்கோட்டில் கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மூங்கப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் மாதேஷ் (வயது 35). இவர் பாலக்கோட்டில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு டீ குடிப்பதற்காக பாலக்கோட்டில் பாப்பாரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பாரப்பட்டியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று நடந்து சென்ற மாதேசின் பின்னால் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சேலம் அரசு ஆஸ்பததிரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாதேஷ் உயிரிழந்தார். விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






