என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கடலூர் மாவட்டத்தில் 14 பேர் கொரோனாவால் பாதிப்பு

    கடலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 16 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 63 ஆயிரத்து 160 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 870 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து கீரப்பாளையம் வந்தவருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
    Next Story
    ×