என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு படகில் சென்று குறைகளை கேட்ட அண்ணாமலை
Byமாலை மலர்10 Nov 2021 2:04 AM GMT (Updated: 10 Nov 2021 2:04 AM GMT)
இந்த மழைக்காலங்களில் தமிழக அரசும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் தீவிரமாக மக்கள் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
சென்னை :
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக தியாகராயநகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் “மோடி கிச்சன்” நேற்று திறக்கப்பட்டது. இதை பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. மக்களுக்காக சேவை செய்வதில் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. மக்களுக்கு நம்முடைய இலவச தொலைபேசி எண் கொடுத்திருக்கிறோம். மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.
அதேபோல, உணவு பொட்டலம் வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்காக இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்தும் தமிழக அரசு ஏன் குறைக்கவில்லை?. இந்த மழைக்காலங்களில் தமிழக அரசும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் தீவிரமாக மக்கள் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
குறைசொல்வதற்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில் நிவாரணம் கொடுக்க வேண்டியது மாநில அரசினுடைய கடமையாக இருக்கிறது. உடனடியாக யாரெல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்களோ அவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சென்னை கொளத்தூர் ஜவகர் நகருக்கு மழை வெள்ள பாதிப்பை படகு மூலம் சென்று பார்வையிட்ட அண்ணாமலை அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக தியாகராயநகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் “மோடி கிச்சன்” நேற்று திறக்கப்பட்டது. இதை பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. மக்களுக்காக சேவை செய்வதில் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. மக்களுக்கு நம்முடைய இலவச தொலைபேசி எண் கொடுத்திருக்கிறோம். மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.
அதேபோல, உணவு பொட்டலம் வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்காக இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்தும் தமிழக அரசு ஏன் குறைக்கவில்லை?. இந்த மழைக்காலங்களில் தமிழக அரசும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் தீவிரமாக மக்கள் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
குறைசொல்வதற்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில் நிவாரணம் கொடுக்க வேண்டியது மாநில அரசினுடைய கடமையாக இருக்கிறது. உடனடியாக யாரெல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்களோ அவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சென்னை கொளத்தூர் ஜவகர் நகருக்கு மழை வெள்ள பாதிப்பை படகு மூலம் சென்று பார்வையிட்ட அண்ணாமலை அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X