என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று, இவரும் அஜித்குமார் என்பவரும் ராஜகணபதி நகர் பக்கமாக நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலைவாணன் என்கிற வேலு (20), பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் அவர்களிடம் தகராறு செய்தனர். மேலும் கணேசையும், அஜித்குமாரையும் கைகளாலும், பாட்டிலாலும் தாக்கினர். இதில் காயம் அடைந்த கணேஷ், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், கலைவாணன் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story