என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிவகாசியில் வாலிபர் எரித்துக்கொலை: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வகணேஷ் (வயது 21). இவருக்கும், வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வத்திராயிருப்புக்கு சென்ற செல்வகணேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் எரிச்சநத்தம் -விருதுநகர் சாலையில் கோட்டையம்மன் கோவில் அருகே செல்வகணேஷ் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் கருகி கிடந்தது.
எம்.புதுப்பட்டி போலீசார், செல்வகணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் வத்திராயிருப்பைச் சேர்ந்த 4 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்