என் மலர்
செய்திகள்

கைது
செட்டிபாளையத்தில் மணல் கடத்திய டிரைவர் கைது
செட்டிபாளையத்தில் மணல் கடத்திய டிரைவரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
செட்டிபாளையம்:
கோவை மாவட்டம் செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் மற்றும் போலீசார் ராஜசேகர், கார்த்திக் ஆகியோர் பெரியகுயிலி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்து லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியில் முறையான எந்த ஆவணங்களும் இல்லாமல், சட்ட விரோதமாக கிராவல் மண்ணை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் டிரைவரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரியகுயிலி பிரிவை சேர்ந்த விஜய் (வயது 24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி பறிமுதல் செய்து விஜய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் மற்றும் போலீசார் ராஜசேகர், கார்த்திக் ஆகியோர் பெரியகுயிலி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்து லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியில் முறையான எந்த ஆவணங்களும் இல்லாமல், சட்ட விரோதமாக கிராவல் மண்ணை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் டிரைவரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரியகுயிலி பிரிவை சேர்ந்த விஜய் (வயது 24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி பறிமுதல் செய்து விஜய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story