என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 100 கனஅடியாக குறைந்தது
Byமாலை மலர்9 Nov 2021 9:12 AM GMT (Updated: 9 Nov 2021 9:12 AM GMT)
தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
பூந்தமல்லி:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது ஏரியில் 20.99 அடிக்கு தண்ணீர் உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் 5 கண் மதகு வழியாக முதற்கட்டாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் வந்துக்கொண்டிருந்தால் உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாக உயர்ந்தப்பட்டது.
செம்பரபாக்கம் ஏரிக்கு நேற்று நீர்வரத்து 710 கனஅடியாக இருந்தது. ஆனால் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 100 கன அடியாக குறைந்தது. எனினும் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
காலை நிலவரப்படி ஏரியில் 2,852 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது (மொத்த கொள்ளவு 3,645 மி.கன அடி).
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது ஏரியில் 20.99 அடிக்கு தண்ணீர் உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் 5 கண் மதகு வழியாக முதற்கட்டாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் வந்துக்கொண்டிருந்தால் உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாக உயர்ந்தப்பட்டது.
செம்பரபாக்கம் ஏரிக்கு நேற்று நீர்வரத்து 710 கனஅடியாக இருந்தது. ஆனால் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 100 கன அடியாக குறைந்தது. எனினும் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
காலை நிலவரப்படி ஏரியில் 2,852 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது (மொத்த கொள்ளவு 3,645 மி.கன அடி).
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X