search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். இதில் 2,712 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
    திருவள்ளூர்:

    தொடர் மழை காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 35 அடி. தற்போது ஏரியில் 33.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் ஏரியில் இருந்து 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். இதில் 2,712 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×