என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பரம்பாக்கம் ஏரி
    X
    செம்பரம்பாக்கம் ஏரி

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறப்பு

    செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால், அதன் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை: 

    செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவு 25.55 அடி உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு தற்போது 21.45 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1,590 கனஅடியாக உள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    2-வது மதகில் இருந்து முதல் கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. ஏரி திறப்பில் ஆட்சியர் ஆர்த்தி, அதிகாரிகள் பங்கேற்றனர்.

    மேலும், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட உள்ளதால், அதன் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


    Next Story
    ×