search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவுக்கு ஒருவர் பலி
    X
    கொரோனாவுக்கு ஒருவர் பலி

    புதுச்சேரி ஏனாமில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 165 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 5, காரைக்காலில் 6, ஏனாமில் 2, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 49, காரைக்காலில் 5, ஏனாமில் 2, மாகியில் 8 பேர் என 64 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 18, காரைக்காலில் 7, மாகியில் 10 பேர் என 35 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 165 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 999 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    புதுவையில் 119, காரைக்காலில் 62, ஏனாமில் 8, மாகியில் 51 பேர் என 240 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 304 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். ஏனாமை சேர்ந்த 47 வயது ஆண் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 11 லட்சத்து 35 ஆயிரத்து 205 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×