என் மலர்
செய்திகள்

முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூர் முருகன் கோவில் ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படுகிறது- மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திருச்செந்தூர் முருகன் கோவிலில் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடித்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருக்கோவிலான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த திருக்கோவிலுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலை ரூ.300 கோடி செலவில் மேம்படுத்த ஒருங்கிணைந்த பெருந்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரத்தை தரிசிக்கும் அளவுக்கு கட்டிடங்களை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், மாலைமுரசு நிர்வாக இயக்குனர் மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், எச்.சி.எல். நிறுவன துணைத்தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர், சுந்தர் மகாலிங்கம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அன்னதானக்கூடம், கீழ் தளம், முதல் தளம் என 1,000 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் அளவுக்கு திட்டங்களை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
பக்தர்கள் காத்திருக்கும் அறையில் தொலைக்காட்சி பெட்டி, குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை மிக நேர்த்தியாக அமைத்துக் கொடுப்பது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கோவிலை சுற்றி உள்ள பனைப்பொருட்கள், கடல்சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ளதைவிட அதிகளவில் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபாரக் கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்துமிடம், அவசர ஊர்தி, யானைகள் பராமரிப்பு கொட்டகை, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தி செய்து கொடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல் திருப்பதியை போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்ய என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்தும், அங்கபிரதட்சனம் செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கலாமா? என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருக்கோவிலான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த திருக்கோவிலுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலை ரூ.300 கோடி செலவில் மேம்படுத்த ஒருங்கிணைந்த பெருந்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரத்தை தரிசிக்கும் அளவுக்கு கட்டிடங்களை கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், மாலைமுரசு நிர்வாக இயக்குனர் மற்றும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், எச்.சி.எல். நிறுவன துணைத்தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர், சுந்தர் மகாலிங்கம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அன்னதானக்கூடம், கீழ் தளம், முதல் தளம் என 1,000 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் அளவுக்கு திட்டங்களை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
பக்தர்கள் காத்திருக்கும் அறையில் தொலைக்காட்சி பெட்டி, குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை மிக நேர்த்தியாக அமைத்துக் கொடுப்பது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கோவிலை சுற்றி உள்ள பனைப்பொருட்கள், கடல்சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ளதைவிட அதிகளவில் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபாரக் கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்துமிடம், அவசர ஊர்தி, யானைகள் பராமரிப்பு கொட்டகை, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தி செய்து கொடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல் திருப்பதியை போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்ய என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்தும், அங்கபிரதட்சனம் செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கலாமா? என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
திருச்செந்தூர் கோவிலில் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடித்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்...மிக கனமழைக்கு வாய்ப்புள்ள 6 மாவட்டங்கள்
Next Story






