என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
திருக்கோவிலூரில் ஜவுளிக்கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்- 4 பேர் மீது வழக்கு
திருக்கோவிலூரில் ஜவுளிக்கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் சைலோம் பகுதியை சேர்ந்தவர் துக்காராம்(வயது 25). இவர் சம்பவத்தன்று திருக்கோவிலூர் வடக்கு வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் புதிய ஜவுளிகளை வாங்கிவிட்டு, பில் போடுவதற்காக நின்றார். அப்போது துக்காராமுக்கும், பில் போடும் ஊழியருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைபார்த்த கடை உரிமையாளர் பாண்டியன் மற்றும் பாலு என்பவரும் தகராறை விலக்கி விட்டனர். அப்போது ஆத்திரமடைந்த துக்காராம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பாண்டியனையும், பாலுவையும் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் துக்காராம் உள்பட 4 பேர் மீது திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி குரூஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






