search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்தல்
    X
    மணல் கடத்தல்

    ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேர் கைது

    ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள இசுகு பட்டியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக வல்லத்திராகோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இசுகுபட்டி கோவில் வாசல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆலங்குடி கோவில்பட்டியை சேர்ந்த பிரவீன் மற்றும் இசுகு பட்டியை சேர்ந்த பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இது குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×