search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலம்- மகிழ்ச்சி அமையட்டும்: கவர்னர் தமிழிசை தீபாவளி வாழ்த்து

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமையான தீபாவளியை, இறைவனுக்கு மிகவும் பிடித்த எளிமையான முறையில் கொண்டாடி மகிழ வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் தங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் உறவினர்களோடும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாள் தீபாவளித் திருநாள்.

    இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் சிறந்த ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்.

    இந்த தருணத்தில், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமையான தீபாவளியை, இறைவனுக்கு மிகவும் பிடித்த எளிமையான முறையில் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    புதுவை, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×