search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு மேலும் 2 நாட்கள் விடுமுறை

    புதுவை மற்றும் காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி புதுச்சேரி விடுதலை நாள், கல்லறை திருநாள் என தொடர்ச்சியாக தீபாவளி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்கள் மீண்டும் புதுவைக்கு திரும்ப வசதியாக கூடுதல் நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறைகள் முடிந்து வருகிற 8-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
    Next Story
    ×