என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் - கோவில் திருவிழா நடத்த அனுமதி
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கடைகளை இரவு 11 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் இரவு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் புதுவையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 15-ந் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் இரவு11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்...கூட்டமான இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவு அமைப்புகள் எச்சரிக்கை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்