search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தூசி அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை

    தூசி அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே பெரிய ஏழாச்சேரி ரோடு தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 42), விவசாயி. இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மதுபானத்துக்கு அடிமையான அவர் உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.

    இதனால் மனமுடைந்த அவர் கடந்த 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தனசேகரன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்து, பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×