search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம்.
    X
    ஏ.டி.எம்.

    தெரியாத நபரிடம் ஏ.டி.எம். கார்டு எண்ணை தரக்கூடாது - போலீசார் எச்சரிக்கை

    ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கச் செல்லும்போது வாடிக்கையாளர்கள் ஹெல்மெட் அணிந்தோ, முகத்தில் துணி கட்டியோ செல்லக்கூடாது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் நிகழாமல் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக வங்கி மேலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி. சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இன்ஸ்பெக்டர் அபர்ணா வரவேற்றார். எஸ்.பி. செல்வகுமார் தலைமை வகித்து பேசியதாவது:-

    சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க வாடிக்கையாளர் விவரங்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கச் செல்லும்போது வாடிக்கையாளர்கள் ஹெல்மெட் அணிந்தோ, முகத்தில் துணி கட்டியோ செல்லக்கூடாது.

    வாடிக்கையாளர் முன்பின் தெரியாத நபரிடம் பணம் எடுக்க ஏ.டி.எம். கார்டு ரகசிய நம்பரை தரக்கூடாது. ஆன்லைன் மூலமாக நடக்கும் மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் சைபர் கிரைம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உரிய ஒத்துழைப்புகளை வங்கி மேலாளர்கள் அளிக்க வேண்டும்‌. அதேபோல் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தியும் ஏ.டி.எம். மெஷினில் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு எஸ்.பி. ஆலோசனை வழங்கினார்.

    Next Story
    ×