search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குடியாத்தத்தில் பைக் திருடிய வாலிபர் கைது

    குடியாத்தத்தில் பைக் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பைக்குகள் திருடி செல்வதாக புகார்கள் வந்தன.

    இதைதொடர்ந்து போலீசார் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடியாத்தம் கஸ்பா அரசமர தெருவைச் சேர்ந்தவர் விஷ்ணு என்கிற வசீகரன் (வயது 19) என தெரியவந்தது. மேலும் வசீகரன் ஓட்டி வந்ததது திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது.

    தொடர்ந்து விசாரணையில் வசீகரன் குடியாத்தம் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெரு, கீழ் சுதந்திர வீதி, கள்ளூர் கேஎம்ஜி கார்டன், காமாட்சியம்மன்பேட்டை, திருமலை கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகளை திருடியது தெரியவந்தது.

    வசீகரனிடம் இருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு என்கிற வசீகர கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×