search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    முதல்-அமைச்சர் நாற்காலி மட்டுமே ரங்கசாமியின் குறிக்கோள்- நாராயணசாமி குற்றச்சாட்டு

    புதுவையில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    இந்திராநகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் தர்மா புரியில் நடந்தது.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் அரசுக்கு தொல்லை கொடுக்க கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்பட்டார். எந்த திட்டத்தையும் செயல்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தோம். அப்போது மறுக்கப்பட்டது.

    இப்போது புதிய அரசு செயல்படுத்துகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தொகுதியை பற்றி கவலைப்படவில்லை. சாலைகள் மோசமாக உள்ளது. அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை.

    உள்ளாட்சி தேர்தலில் தகுதியானவர்ளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். ரங்கசாமிக்கு மக்களைப்பற்றி கவலையில்லை. அவரின் ஒரே குறிக்கோள் முதல்-அமைச்சர் நாற்காலி மட்டுமே. தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவில்லை. கூடுதல் நிதி பெற மத்திய அமைச்சர்களை சந்திக்கவில்லை.

    இப்போது புதுவையில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×