என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சர் நாற்காலி மட்டுமே ரங்கசாமியின் குறிக்கோள்- நாராயணசாமி குற்றச்சாட்டு
Byமாலை மலர்29 Oct 2021 8:46 AM GMT (Updated: 29 Oct 2021 8:46 AM GMT)
புதுவையில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
இந்திராநகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் தர்மா புரியில் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் அரசுக்கு தொல்லை கொடுக்க கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்பட்டார். எந்த திட்டத்தையும் செயல்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தோம். அப்போது மறுக்கப்பட்டது.
இப்போது புதிய அரசு செயல்படுத்துகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தொகுதியை பற்றி கவலைப்படவில்லை. சாலைகள் மோசமாக உள்ளது. அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் தகுதியானவர்ளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். ரங்கசாமிக்கு மக்களைப்பற்றி கவலையில்லை. அவரின் ஒரே குறிக்கோள் முதல்-அமைச்சர் நாற்காலி மட்டுமே. தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவில்லை. கூடுதல் நிதி பெற மத்திய அமைச்சர்களை சந்திக்கவில்லை.
இப்போது புதுவையில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திராநகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் தர்மா புரியில் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் அரசுக்கு தொல்லை கொடுக்க கிரண்பேடி கவர்னராக நியமிக்கப்பட்டார். எந்த திட்டத்தையும் செயல்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தோம். அப்போது மறுக்கப்பட்டது.
இப்போது புதிய அரசு செயல்படுத்துகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தொகுதியை பற்றி கவலைப்படவில்லை. சாலைகள் மோசமாக உள்ளது. அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் தகுதியானவர்ளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். ரங்கசாமிக்கு மக்களைப்பற்றி கவலையில்லை. அவரின் ஒரே குறிக்கோள் முதல்-அமைச்சர் நாற்காலி மட்டுமே. தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவில்லை. கூடுதல் நிதி பெற மத்திய அமைச்சர்களை சந்திக்கவில்லை.
இப்போது புதுவையில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X