என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழையூரில் காரில் கடத்தி வந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள சாராயம் பறிமுதல்- டிரைவர் கைது
Byமாலை மலர்23 Oct 2021 11:09 AM GMT (Updated: 23 Oct 2021 11:09 AM GMT)
நாகை அருகே கீழையூரில் காரில் 17 ஆயிரத்து 550 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது.விசாரணையில் விற்பனைக்காக காரைக்காலில் இருந்த சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் பகுதியில் எஸ்.பி. ஜவகர் உத்தரவின் பேரில் போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
காரை ஓட்டி வந்த திருவாரூர் கமலாபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது35) என்பவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் 17 ஆயிரத்து 550 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது.விசாரணையில் விற்பனைக்காக காரைக்காலில் இருந்த சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X