search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    திருவண்ணாமலை அருகே கத்தியை காட்டி மிரட்டி கணவனுடன் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

    திருவண்ணாமலை அருகே கத்தியை காட்டி மிரட்டி கணவனுடன் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ. நம்மியந்தல் கிராமத்தில் திருக்கோவிலூரை அடுத்த அதண்டமருதூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, அவரது மனைவி செல்வராணி (வயது27) ஆகியோர் வேர்க்கடலை பிடுங்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று இரவு கணவன் -மனைவி இருவரும் மருந்து வாங்குவதற்காக திருவண்ணாமலைக்கு பைக்கில் வந்துவிட்டு திரும்பிச் சென்றனர். அவர்கள் எஸ்.கே.பி.கல்லூரி அருகில் சென்றபோது ஏழுமலை மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பகுதிக்கு சென்றார்.

    அப்போது தனியே நின்ற செல்வராணியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டான்.

    இதுபற்றி செல்வராணி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×