என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காரைக்குடி அருகே ஆவின் சேர்மன் கார் எரிப்பு- ரூ.5¼ லட்சம் கொள்ளை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். அ.தி.மு.க. மாவட்ட பேரவை செயலாளரான இவர், சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட ஆவின் சேர்மனாக உள்ளார். அசோகன் தற்போது குடும்பத்துடன் தேவகோட்டையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லுவயலில் உள்ள அசோகன் வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இனோவா கார் எரிந்து கொண்டிருந்தது.
உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீணை அணைக்க முற்பட்டனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. அதே சமயத்தில் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்த தகவல் தேவகோட்டையில் இருந்த அசோகனுக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக அமராவதிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து விட்டு காருக்கு தீ வைத்து விட்டு சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அரசியல் பழி வாங்கும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்