search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலியான ராஜலட்சுமி-பழனிவேல்.
    X
    மின்சாரம் தாக்கி பலியான ராஜலட்சுமி-பழனிவேல்.

    நாகை அருகே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி

    நாகை அருகே அறுந்து கிடந்த மின்னழுத்த கம்பியை தூக்கி வீச முயன்றபோது மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 55) தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (50).

    இந்த நிலையில் இன்று காலை ராஜலெட்சுமி வீட்டின் பின்புறம் நின்று சமையலுக்காக நண்டு கழுவி கொண்டிருந்தார். அப்போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கிடந்ததை பார்த்து அதனை கையால் எடுத்து தூக்கிவீச முயன்றார். இதில் ராஜலட்சுமி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த கணவர் பழனிவேல் ராஜலட்சுமியை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.

    இதில் கணவன்-மனைவி இருவரும் உடல்கருகி இறந்தனர். தகவல் அறிந்த நாகை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனிவேல், ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த தம்பதிக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    Next Story
    ×