search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மஞ்சக்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சின்ன பள்ளி வாசல் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில், ஒருவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். 

    இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த சேகர் (வயது 51) என்பதும், புகையிலை பொருட்களை தனது மளிகை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் மளிகை கடையில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×