search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஈரோட்டில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 81 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 678 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 928 பேர் பல்வேறு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×