search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஈரோடு மாவட்டத்தின் அணை பகுதிகளில் பரவலாக பெய்த மழை

    ஈரோடு மாவட்டத்தின் அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கொடுமுடியில் அதிகபட்சமாக 38.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கடம்பூர் வனப்பகுதி, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அம்மாபேட்டை அப்பகுதி ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்திருந்தன.

    இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கொடுமுடியில் அதிகபட்சமாக 38.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இதேபோல் சென்னிமலை, தாளவாடி, ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் அணை பகுதிகளான குண்டேரி ப்பள்ளம், கொடிவேரி, வரட்டுப்பள்ளம், பவானிசாகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ.வருமாறு:-

    கொடுமுடி-38.2, சென்னிமலை-31, தாள வாடி-23.4, ஈரோடு-23, குண்டேரிப்பள்ளம்-14.6, கோபி-13.6, பெருந்துறை-9, கொடிவேரி-9, வரட்டுப்பள்ளம்-4, சத்தியமங்கலம்-2, பவானிசாகர்-1.2.

    Next Story
    ×