search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    பேரிகை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

    பேரிகை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பேரிகை அருகே உள்ள பீமாண்டப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது 66). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தண்ணீர் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். மோட்டார் இயங்காததால் அவர் அதை சோதனை செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×