என் மலர்
செய்திகள்

தற்கொலை
ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் பக்கமுள்ள திருமலை குப்பத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 42). இவர் ஓசூர் சிப்காட் அருகே பேகேப்பள்ளி ராஜாஜி நகரில் தங்கி, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சண்முகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






