search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நரிக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: விவசாயி-சிறுவன் பலி

    நரிக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி, சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற கருப்பையா(வயது 40). விவசாயி. இவரும் அதே ஊரை சேர்ந்த அஜய் (15) என்ற சிறுவனும் நேற்று முன்தினம் இரவு உலக்குடியில் இருந்து பனைக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சாலை இலுப்பைக்குளத்தில் இருந்து பனைக்குடி செல்லும் சாலையில் சொக்காயி அம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே உவர்குளம் கிராமத்தை சேர்ந்த செந்தாமரை கண்ணன்(31) வந்த மோட்டார் சைக்கிளும், இவர்களது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுரேசும், அஜய்யும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த செந்தாமரைக்கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×