என் மலர்
செய்திகள்

மழை
ஈரோடு மாவட்டத்தில் 3வது நாளாக பலத்த மழை
பவானிசாகர், கொடிவேரி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, நம்பியூர், குண்டேரி ப்பள்ளம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில் 5 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் பெரும்பாலான பகுதியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்து. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக பவானி, கொடுமுடி அப்பகுதியில் பலத்த மழையும், கவுந்தப்பாடி பகுதியில் வரலாறு காணாத வகையில் மழை பதிவாகியிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 3-வது நாளாக புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது. குறிப் பாக கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 44.4 மி. மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதேப்போல் பவானிசாகர், கொடிவேரி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, நம்பியூர், குண்டேரி ப்பள்ளம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி-44.4, பவானிசாகர்-29.8, கொடிவேரி-27.4, பெருந் துறை-27, சென்னிமலை-21, கோபி-16.4, நம்பியூர்-14, குண்டேரிபள்ளம்-10.2, தாளவாடி-4, சத்திய மங்கலம்-4, ஈரோடு-2, வரட்டுப்பள்ளம்-1.6, மொடக்குறிச்சி-1.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில் 5 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் பெரும்பாலான பகுதியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்து. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக பவானி, கொடுமுடி அப்பகுதியில் பலத்த மழையும், கவுந்தப்பாடி பகுதியில் வரலாறு காணாத வகையில் மழை பதிவாகியிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 3-வது நாளாக புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது. குறிப் பாக கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 44.4 மி. மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதேப்போல் பவானிசாகர், கொடிவேரி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, நம்பியூர், குண்டேரி ப்பள்ளம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி-44.4, பவானிசாகர்-29.8, கொடிவேரி-27.4, பெருந் துறை-27, சென்னிமலை-21, கோபி-16.4, நம்பியூர்-14, குண்டேரிபள்ளம்-10.2, தாளவாடி-4, சத்திய மங்கலம்-4, ஈரோடு-2, வரட்டுப்பள்ளம்-1.6, மொடக்குறிச்சி-1.
Next Story






