என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணிடம் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்28 Sep 2021 10:39 AM GMT (Updated: 28 Sep 2021 10:39 AM GMT)
பெண்ணிடம் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் முகமது இத்ரீஸ். இவரது மனைவி நசீரா பானு (வயது 28). இவர் சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி கே.புதுப்பட்டிக்கு பஸ்சில் நின்று கொண்டு சென்று கொண்டிருந்தார். இவரது அருகில் உட்கார்ந்து இருந்த பெண் ஒருவர் பையை கொடுங்கள் நான் வைத்திருக்கிறேன் என கேட்டு வாங்கி உள்ளார். பின்னர் கீழாநிலைக்கோட்டை பஸ்நிறுத்தம் வந்ததும் அந்த பெண், நசீமா பானுவிடம் பையை கொடுத்து விட்டு இறங்கி சென்றுவிட்டார். நசீமாபானு கே.புதுப்பட்டி வந்து இறங்கி பையை திறந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த பர்ஸ் காணவில்லை. அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7 ஆயிரமும் காணவில்லை. இது தொடர்பாக நசீமா பானு கொடுத்த புகாரின் பேரில் கே. புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X