என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூரில் கோட்டை அகழியில் குதித்து ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை
வேலூர்:
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கபூர். இவருடைய மகள் சந்தியா (வயது 24). சி.எம்.சி ஆஸ்பத்திரியில் உள்ள கேண்டீனில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை வேலூர் கோட்டை நுழைவுவாயில் அருகே உள்ள மதில் சுவரில் சந்தியா ஏறினார். அங்கிருந்து அகழி தண்ணீரில் குதித்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அலறி கூச்சலிட்டனர்.
மேலும் இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கிய சந்தியா பரிதாபமாக இறந்தார். தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டனர்.
வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தியா எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.
அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டையில் இன்று காலை இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்