என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது - தப்பி ஓடிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
Byமாலை மலர்25 Sep 2021 2:32 PM GMT (Updated: 25 Sep 2021 2:32 PM GMT)
புதுக்கோட்டை அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடப்பன் வயல் இறைவன் நகர் பகுதியில் ஒரு இடத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் கண்டனர். அவர்களில் 2 பேரை போலீசார் பிடித்த நிலையில் 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அடப்பன்வயலை சேர்ந்த குமார் (வயது 25), ராஜகோபால் (24) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, மிளகாய் பொடி, கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X