search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பிளஸ்-1 படிக்கும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

    ஈரோட்டில் பிளஸ்-1 படிக்கும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு சம்பத்நகரை சேர்ந்தவர் தராசு வியாபாரி. இவரது மகள் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தராசு வியாபாரி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வியாபாரியிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வியாபாரியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×